search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பள்ளி கட்டிடம்; அமைச்சர் திறப்பு
    X

    புதிய அரசு பள்ளி கட்டிடத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன், முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    புதிய பள்ளி கட்டிடம்; அமைச்சர் திறப்பு

    • கமுதியில் ரூ. 2.97 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள கோவி லாங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ரூ.2.97 லட்சம் மதிப்பிலான புதிய கட்டி டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங் கம், மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை கார்லின் வரவேற்று பேசி னார். தெற்கு ஒன்றிய செய லாளர்

    மனோகரன், தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், துணை தலைவர் துரைப் பாண்டி, பள்ளி மேலாண் மை குழு தீபா காளிமுத்து, வட்டார வளமைய மேற் பார்வையாளர் ஸ்ரீராம், இல்லம் தேடி கல்வி ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கோவிலாங்குளம் ராமமூர்த்தி, செந்தில், வழி விட்டான், ஜெயராஜ், முத்து ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×