search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்
    X

    சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்

    • சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், நடப்பு ஆண்டில் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்க ளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டில் விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு 150 பேருக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.22.50 லட்சத்திற்கு மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15000 அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

    இந்த திட்டம் நுண்ணீர் பாசன இணையதளம் வாயி லாக செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்க ளில் உள்ள வேளாண் பெருமக்கள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளா கத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந் துள்ள உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தையும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகு ளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-வது தளத்தில் அமைந்துள்ள செயற்பொறி யாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×