search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழா
    X

    கொலு வைக்கும் நிகழ்வை தலைமை குருசாமி மோகன் தொடங்கி வைத்தார்.

    நவராத்திரி விழா

    • ராமநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
    • நிறைவு நாளன்று வல்லபை மஞ்சமாதா அம்மனின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தின் சார்பில் 18-வது ஆண்டு நவராத்திரி விழா இன்று அதிகாலை கணபதி ஹோமம் மற்றும் அஷ்டாபிசேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வல்லபை மஞ்சமாதா அம்மனுக்கு காப்புக் கட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதுகுறித்து கோவில் தலைமை குருக்கள் மோகன் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி 10-நாட்களுக்கும் வல்லபை மஞ்சமாதா தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார். நாள்தோறும் மாலை கொலு மண்டபத்தில் குழந்தைகளின் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    நிறைவு நாளன்று வல்லபை மஞ்சமாதா அம்மனின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். தினசரி பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான வல்லபை வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெறும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றார்.

    விழா ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×