search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி
    X

    பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி

    • பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்ற ஆசிப்பிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, 2-ம் பரிசை வென்ற முகம்மது யூசுப்பிற்கு பஞ்சாயத்து துணை தலைவர் புரோஸ் கான், 3-ம் பரிசை வென்ற கைப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பஹது ராஜா ஆகியோர் காசோலை வழங்கினர்.

    ஒன்றிய பற்றாளர் லதா, கவுன்சிலர்கள் மீராசா, அயூப் கான், பீர் முஹைதீன், ரஜப் நிஷா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெற உதவிய அக்பர் அம்பலம், செய்யது இபுராமுசா, ரஜபுல்லாஹ் பெரியபட்டினம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    Next Story
    ×