search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் மகசூலை பெருக்குவதற்கான வழிமுறைகள்: ஆலோசனை
    X

    நெல் மகசூலை பெருக்குவதற்கான வழிமுறைகள்: ஆலோசனை

    • நெல் மகசூலை பெருக்குவதற்கான வழிமுறைகளை வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கினார்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    நெல் விளைச்சலில் 40 விழுக்காடு உர நிர்வா கத்தை பொருத்தே அமை கிறது. இயற்கை எருக்களான பசுந்தாள் உரம், தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க் கழிவு, செயற்கை உரங்க ளான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள், உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பைரில்லம், நுண்ணூட்ட சத்துக்களை சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகம். நிலவளத்தை காத்து, விளைச்சலை அதிகரிக்க செய்ய முடியும்.

    மண் ஆய்வு அடிப்ப டையில் வயலில் வேதியியல் உரங்களை இட வேண்டும். இதனால் மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கும் உரச் சத்தின் அளவையும் பயிரின் உரத் தேவையையும் தீர்மானிக்கலாம். இதனால் தேவைக்குக் குறைவான அல்லது அதிகமாக உர மிடுவதை தவிர்க்கலாம்.

    மண் ஆய்வு செய்யாத நிலமாக இருப்பின், ஏக்க ருக்கு 50 கிலோ தழைச் சத்தும், 20 கிலோ மணிச் சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். இதில் அடியுரமாக மணிச் சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.

    நெல் பயிரின் இளம் பருவத்தில் வேர்ப்பிடித்து நன்றாக வளர்வதற்கும், பூக்கள் பூப்பதற்கும், நெல் மணிகளின் வளர்ச்சி எண்ணிக்கை, முதிர்வ டைதல் ஆகியவற்றை சீராக்கி விளைச்சலைப் பெருக்குவதற்கு ஏக்கருக்கு 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு மாதம் காற்று புகாமல் வைத்து ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி கடைசி உழவின்போது இட வேண்டும்.

    இரும்பு சத்து குறை பாடுள்ள நிலத்தில் அடியு ரமாக பெரஸ் சல்பேட்டை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மானாவாரி நெல்லுக்கு சிங்க் சல்பேட் ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் விதைப்பின் போது இட வேண்டும்.

    ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பை ரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்க வேண்டும்.

    நெல் பயிருக்கு மேலுர மிடுவதில் மிகுந்த கவனம் தேவை. நெல் வளர்ச்சியில் தூர்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம், பூக்கும் தருணம் ஆகிய காலங்களில் பயிர்களுக்கு உணவு சத்துக்களின் தேவை அதிகம். இதற்கு தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    மானாவாரியில் பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு தழைச்சத்து அடங்கிய யூரியாவை நட்ட 20, 40, 60-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில் இட வேண்டும். சாம்பல் சத்து உரத்தை நட்ட 20, 40-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 8, 9 கிலோ இட வேண்டும்.

    இலைவழி உரமாக 1 சதம் யூரியாவை 1 சதம் டி.ஏ.பி. கரைசலை இரு முறை குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் தெளிப்பது நல்லது.

    இந்த வழிமுறை களை முறையாக பயன்படுத் துவதால் நெல் மகசூலை பெருக்கமுடியும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×