search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்களிடம் நகை பறிப்பு
    X

    2 பெண்களிடம் நகை பறிப்பு

    • 2 பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா (வயது23). இவர் ஸ்கூட்டரில் அரசனூரி லிருந்து தேவிபட்டினம் கம்ப்யூட்டர் சென்டருக்கு போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அரசனூர் காலனி சுடுகாடு அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டனர். இதில் சத்யா கீழே விழுந்தும் கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் சத்யா புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் அமரல்பீவி என்ற சக்கரை யம்மாள் (60). இவர் நேற்று மேலூர் கணேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறியபோது அவரது கட்டைபையில் இருந்த 3 பவுன் தங்க செயினைமர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×