search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்
    X

    ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்

    • ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.
    • புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரன் பதவி ஏற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிறந்த இடத்திற்கு மீண்டும் வருவதே ஒரு பெருமையாகும். அந்த அளவிற்கு நான் முதல் முதலாக 2015-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோளட்டத்தில் சார்ஆட்சியராக 2 ஆண்டுகள் பணியாற்றினேன்.

    அதனை தொடர்ந்து நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளராகவும், சென்னையில் நகராட்சி நிர்வாக இணை ஆணைய ராகவும் பணியாற்றி விட்டு முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுள்ளேன்.

    அரசின் திட்டங்களை கடைக்கோடிகிராமங்கள் வரைகொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவேன். குறிப்பாக இதற்குமுன் பணியாற்றிய கலெக்டர்களின் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மட்டுமின்றி, மேலும் சிறப்புடன் செயல்படுத்துவேன்.

    அதேபோல் இந்த மாவட்டம் எனக்கு பிறந்த வீடு போல் என்ற பெருமை உண்டு. காரணம், நான் முதல் முறையாக அரசு பணிக்கு பணியாற்றியது இந்த மாவட்டத்தில் தான். தற்பொழுது மீண்டும் இதே மாவட்டத்திற்கு கலெக்டராக வந்திருப்பது தாய் வீட்டுக்கு வந்ததுபோல் உள்ளது.

    இந்த மாவட்டத்தை பொறுத்த வரை மக்களின் தேவை என்ன என்பதை அறிவேன். முதல்- அமைச்சரை சந்தித்த போது அவர் பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களை செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.

    கலெக்டர் என்ற முறையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன், பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். நாள்தோறும் என்னை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கும் பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைத்திட செயல்படுவேன். என்னை பொறுத்தவரை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். தொலை பேசியிலும் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதிலும் செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×