இலவச சட்ட உதவி முகாம்

இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
இலவச சட்ட உதவி முகாம்
Published on

முதுகுளத்தூர்

முக்குளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி டி.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர், ஆனையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக் கண்ணன் (கி.ஊ), ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், வக்கீல் சங்க செயலாளர் சிவராமகிருஷ்ணன், வக்கீல் சந்திரேசேகர், கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி, ஊராட்சி செயலர் பொன்மணி உள்பட வெங்கலகுறிச்சி, தொட்டி வலசை, கருங்கலக்குறிச்சி, திருவாக்கி, கிருஷ்ணாபுரம், கீழப்பனையடியேற்தல் ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் நீதிபதி டி.ராஜ்குமார் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க இலவச சட்ட உதவி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com