search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை வலியுல்லாஹ் தர்கா கொடியேற்று விழா
    X

    கீழக்கரை வலியுல்லாஹ் தர்காவில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம். 

    கீழக்கரை வலியுல்லாஹ் தர்கா கொடியேற்று விழா

    • கீழக்கரை வலியுல்லாஹ் தர்கா கொடியேற்று விழா நடந்தது.
    • மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத்திற்கு உட்பட்ட மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில் 849-ம் ஆண்டு கொடி யேற்று விழா நடைபெற்றது.

    கீழக்கரை புதுப் பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாஅத் உலமா பெருமக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முகம்மது அஸ்லம் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக் காக சிறப்பு பிராத்தனை செய்தனர். இதையடுத்து தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் பிரமுகர்கள் அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாட்சா, சாகுல் ஹமீது என்ற ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், சதக் அப்துல் காதர் மற்றும் கீழக்கரை நகர துணை சேர்மன் ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்ட னர்.

    கீழக்கரை ஒடைக்கரைப் பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் சீனி முஹம்மது, பசீருதீன், ஹாஜா, ராசிக் பரீத், சபிர்கு ஆகியோரும் 18 ஷுஹதாக்கள் ஜகாத் கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முஹம்மது சுஐபு, சுல்த்தான், யூசுப் அமீன், ஹபீப் முஹம்மது நெய்னா, குத்புதீன் ஆகியோரும், பாஹிர்தீன் தலைமையி லான எம். ஆர். எப், இளை ஞர் குழுவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி ருந்தனர்.

    ஜமாஅத்தை நிர்வகிக்கும் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க உறுப்பினர்கள், மற்றும் சங்க மேலாளர் அப்துல் ரசாக் உட்பட அனைவரும் விழா சிறப்புற நடைபெறுவதற்கு ஆலோசனை வழங்கினர்.நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பிரமுகர்களும் கீழக்கரை அனைத்து ஜமா அத்தை சேர்ந்த பிரமுகர்கள், அரூஸ்யா பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறையினர் சிறப்பாக செய்தனர்.

    18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனை நிகழ்வில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×