search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டு வரை அவகாசம் நீட்டிப்பு
    X

    குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டு வரை அவகாசம் நீட்டிப்பு

    • குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறியதாவது:-

    பிறப்பு பதிவு குழந்தை யின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது.

    பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றி தழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.

    ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த குழந்தை யின் பிறப்பு பதிவு செய்யப் பட்ட 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாள ரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

    12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

    இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறி வுரைபடி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப் பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கட்டுள்ளது.

    பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய பிறப்பு, இறப்பு பதிவா ளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×