ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா

ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
சந்தனகூடு திருவிழா.
சந்தனகூடு திருவிழா.
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர். 

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா  போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். 

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் 23 நாட்கள் ஓதுவர். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார்.

10-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும்.  ஜூன் 11-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந்தேதி அதி காலை தர்காவிற்கு சந்தனக்கூளடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 

ஜூன் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com