search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு
    X

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைய வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்ட பம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இமானுவேல் சேகரனாருக்கு அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில் மணிமண்டபம் அமையவுள்ள இடம் பார்வையிடப் பட்டுள்ளது.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குரிய அனுமதியினை பெற்று விரைவில் பணிகள் நடை பெறும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    பின்னர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபு ரம் தி.மு.க மாவட்ட செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வ ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் கலெக்டர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர சபை தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜய குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், தி.மு.க. விவசாய அணி மாநில துணைச் செயலாளரும்,

    முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருக வேல் மற்றும் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா ராணி,தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×