search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி-மதுரை ரயில்வே வீரர் சாதனை
    X

    செஸ் ஒலிம்பியாட் போட்டி-மதுரை ரயில்வே வீரர் சாதனை

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரை ரயில்வே வீரர் சாதனை படைத்தார்.
    • அவர் 8.5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

    மதுரை

    மாமல்லபுரத்தில் நடந்த 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில், தென்னக ரயில்வே சார்பில் பி.டி. முரளி கிருஷ்ணன் பங்கேற்றார்.

    இதில் நீண்ட நேரம் விளையாடக்கூடிய கிளாசிக்கல் போட்டியில் கலந்து கொண்ட அவர் மொத்தம் உள்ள பாயிண்டுகளில், 8.5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். அவருக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

    மதுரை ரயில்வே அலுவலக கணக்கியல் பிரிவு ஊழியரான பி.டி. முரளி கிருஷ்ணன், கோட்ட நிதி மேலாளர் இசைவாணனுடன், கோட்டரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    Next Story
    ×