search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து-தாசில்தார்
    X

    விடுதியில் ஆய்வு செய்த தாசில்தார் பழனிக்குமார்.

    விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து-தாசில்தார்

    • விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் கூறினார்.
    • கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தற்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வந்து தங்கி இருந்து நேர்த்திகளை செலுத்தி விட்டு செல்கின்ற னர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதி களில் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் பணம் வசூல் செய்து வருவதாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதி களுக்கு சென்று அங்குள்ள பதிவு புத்தகத்தை எடுத்து சோதனை செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், அப்போது வாடகை கட்டண பட்டி யலை தங்கும் விடுதிகளில் பயணிகளின் பார்வைக்கு தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும். முறையான பணம் வாங்கிய பிறகு பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதல் பணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளி யூர் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து வரக் கூடிய யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகளை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதி யின் உரிமம் ரத்து செய்யப் படும் என்றார்.

    Next Story
    ×