search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய்களை சீரமைக்க வேண்டும்- கலெக்டர்
    X

    கால்வாய்களை சீரமைக்க வேண்டும்- கலெக்டர்

    • கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மற்றும் ராமநாதபுரம் வட்டத்தில் பொதுப்பணித்துறையில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி வட்டம், பாண்டியூர், சிறகிக்கோட்டை, தொருவர், காரேந்தல் ஆகிய பகுதிகளுக்கு சென்று வைகை ஆற்றில் இருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் கரைகள் வலுப்படுத்தும் பணி, தடுப்பணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கழுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வரும் மழை கலத்திற்குள் முடித்திட வேண்டும்.

    வைகை ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க குறித்து சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

    மேலும் மழைக்காலம் துவங்குவதற்குள் கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சென்று முழு கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டி யுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்க ளுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுத்து விவசாயிகளுக்கு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு, வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×