search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் சாவு
    X

    திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் சாவு

    • ராமநாதபுரம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    ராமநாதபுரம்

    கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கவுசல்யா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேலுவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கணவர்-மனைவி இருவரும் பனைக்குளம் கிராமத்தில் நடந்த அய்யனார்கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது கவுசல்யா குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×