search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம்
    X

    ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம்

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    Next Story
    ×