search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி புதிய கிளை தொடக்கம்
    X

    வங்கி புதிய கிளை தொடக்கம்

    • வங்கி புதிய கிளை தொடக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பெடரல் வங்கியின் புதிய கிளையை எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் மண்டல மேலாளர் ஸ்ரீ வருண், டாக்டர் அரவிந்தராஜ், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஒரு லட்ச ரூபாய்க்கான டெபாசிட் தொகையை முதன் முதலில் வழங்கினார். வள்ளல் பாரி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வங்கியின் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரம் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

    மேலும் ராமநாதபுரம் குமரன் நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    Next Story
    ×