7 இடங்களில் விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு

7 இடங்களில் விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
7 இடங்களில் விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி தினத்தில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்ட இடங்களிலேயே இந்த ஆண்டும் அமைக்க–ப்படுகிறது. விநாயகா் சதுா்த்தி பூஜைக்கு பிறகு சிலைகள் மாவட்டத்தின் 7 இடங்களில் கரைக்கப்பட உள்ளன.

ராமேசுவரத்தில் 2 இடங்களிலும், ராமநாதபுரம், பரமக்குடி, தேவிப்பட்டினம், நரிப்பையூா், மண்டபம் ஆகிய இடங்களிலும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அளித்த விதிமுறைகளின்படி சிலைகள் தயார் செய்து வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகா் சிலை ஊா்வலமும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே நடைபெறும். விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com