search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்ேதாணியார் ஆலய தேர்பவனி
    X

    அந்ேதாணியார் ஆலய தேர்பவனி நடந்தபோது எடுத்த படம்.

    அந்ேதாணியார் ஆலய தேர்பவனி

    • கமுதியில் அந்ேதாணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
    • இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஜூன் மாதத்தில் நடை பெறும். இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டது. பங்குத் தந்தை அருள்சந்தி யாகு மற்றும் அருட் தந்தை யர்கள் முன்னிலையில், பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர்.

    இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், காலை திருப்பலி நடந்தது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சமனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத் துடன் நடந்தது.

    ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்த தேர்பவனியை மத வேறுபாடின்றி பொது மக்கள் பொரிகடலை, மிளகு, உப்பு, மலர்மாலை, மெழுகு வர்த்தி போன்ற வற்றை கொடுத்து வழிபட்ட னர். பேண்டு வாத்தியம், வானவேடிக்கை, மற்றும் மேல தாளங்களுடன் தேர்பவனி நடந்தது. இன்று சிறப்பு திருப்பலி நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பரத உறவின்முறையினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×