மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டுகோள்

மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
வேலூர் இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளை சந்தித்த போது எடுத்த படம்.
வேலூர் இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளை சந்தித்த போது எடுத்த படம்.
Published on

ஆர்.எஸ்.மங்கலம்

பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு ஆர்.எஸ்.மங்கலம் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசி கனி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர், ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ்நிறுத்தம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களை சந்தித்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினருக்கான திட்டம், மகளிர்குழு தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் குறித்து விளக்கினார்.சிறுபான்மையினருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி பாண்டி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் காந்திநகர் கிராம தலைவர் தமிழ்கண்ணன், செயலாளர் ஆதிரைமன்னன் ஆகியோர் தலைமையில் மீனவர்சங்கம் சார்பாக வேலூர் இப்ராஹிம்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாவை சந்தித்து மத்திய அரசு முஸ்லீம் சிறுபான்மையினருக்கான கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து இத்திட்டங்கள் குறித்து முஸ்லிம் மக்களிடையே எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார், ஆர்.எஸ்.மங்கலம் இளைஞரணி தலைவர் தம்பிதுரை, ஊடகப்பிரிவு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com