search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

    • ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கமுதி

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியில் உள்ள விடத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து (23), தங்கராஜ் (27) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சாயல்குடியில் உள்ள நண்பர் வீட்டிற்கு குழந்தை பிறந்ததைப் பார்க்க வந்தனர்.

    பின்னர் ஊருக்கு திரும்பும் போது கமுதி அருகே உள்ள வில்லனேந்தல் விலக்கு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாடை இருவரும் திருடிக்கொண்டு தப்பினர். பின்னர், கமுதி-குண்டாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களையும் கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×