அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் உள்வாங்கிய கடல்

அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் கடல் உள்வாங்கியது. இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் உள்வாங்கிய கடல்
Published on

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 100 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது. இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

மேலும் உள்வாங்கிய கடல் காரணமாக அந்த பகுதியில் உள்ள பவளப் பாறைகளில் முழுமையாக வெளியே தெரிந்தன. தீர்த்த கடலில் கடல் நீரை கண்ட பக்தர்கள் இன்று தண்ணீறின்றி பாறைகள் தெரிந்ததால் அதிர்ச்சிக்கும் ஆச்சிரியத்திற்கும் உள்ளாகி னர். சமீப காரணமாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் இன்று அதிகளவில் கடல் உள்வாங்கியதால் உள்ளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com