search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி -கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தனர்
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

    பாளையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி -கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தனர்

    • விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "பருகுவோம், பருகுவோம் தூய்மையான நீரை பருகுவோம், காப்போம் காப்போம் குடிநீரின் தரத்தை காப்போம், தேக்குவீர் மழைநீர் பாதுகாப்பீர் குடிநீர், முயல்வோம் முயல்வோம் நீரின் தரம் உயார்ந்த முயல்வோம், அறிவோம், ஆய்வோம் குடிநீரின் தரத்தை அறிவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம், தூய சவேரியார் கல்லூரி வழியாக தூய யோவான் பள்ளி வரை சென்றனர்.

    மேலும் பேரணியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. தொடர்ந்து, இவ்வாகனம் மூலம் முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வா கனம், ராமசாமி, டேனியஸ் மற்றும் மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×