search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட்
    X

    கவுன்சிலர் நீலகண்டன் மழைகோட் வழங்கினார்.

    தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட்

    • மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
    • மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியில் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    தொடர் மழையிலும் பணி செய்த தூய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் அந்த வார்டு குடியிருப்போர் நல சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 20 பேரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலர் நீலகண்டன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவம், குடியிருப்போர் சங்கத்தினர், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×