search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி நகராட்சி பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா
    X

    வானவில் மன்றம் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள். 

    தென்காசி நகராட்சி பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா

    • வானவில் மன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
    • நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முக சுந்தரபாண்டியன் வரவேற்றார். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரஸ்வதி மற்றும் அறிவியல் ஆசிரியை கவுசல்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான் மற்றும் ராசப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாட்டினை ஆசிரியர்கள் வின்சென்ட், மணிமந்திரி, எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்செல்வி, மாலையம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தினர்.

    Next Story
    ×