உப்பிலியபுரம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உப்பிலியபுரம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம் பட்டி அருகே தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் குடித்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 55), விவசாயி. இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

வீட்டை ஒட்டி உள்ள தாழ்வாரப் பகுதியில் பசுக்களையும் கன்றுகளையும் கத்தி பராமரித்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டின் தாழ்வார பகுதியில் கட்டியிருந்த கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு குழுவினர் சங்கப் பிள்ளை தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த பாம்பு, காப்பு காட்டு பகுதியில் விடப்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் மழையால் ஐயாற்றுப் நீரோட்டம் வழியாக கொல்லிமலை பகுதியில் இருந்து மலை பாம்பு வந்திருக்கலாம் எனவும், தொழுவப் பகுதியில் கட்டி இருந்த பசுங்கன்றை விழுங்க வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பகுதி நேற்று நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com