search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு
    X

    கோவையில் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு

    • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது
    • தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    கோவை,

    தமிழ்நாட்டில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியா ளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 என இருந்தது.

    கடந்த 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ.105, 11-ந் தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.18 வரை உற்பத்தியாளர்க ளுக்கு லாபம் கிடைக்கிறது.

    இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோகறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது.தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் வரும் நாட்களில் நுகர்வு இன்னும் அதிகரித்து விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×