திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

பட்டா முறையாக பதியப்படாததை கண்டித்துதிருமயம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்கள்
திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
Published on

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை, திருமயம் தாலுகா, ராயபுரம் வாசுகிபுரத்தில் 32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை முறையாக பதியப்படாததை கண்டித்து, திருமயம் தாசில்தார் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். சங்கர்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர்ஜீவானந்தம், வெகுஜன அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் ஸ்ரீதர் சண்முகம், நாராயணன், ஜனார்த்தனன், அசோகன், கவிபாலா, பாண்டிசெல்வி, சுசிலா, வைகை ராணி, வீரமணி, பெருமாள், வீரையா, நல்லதம்பி, ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com