search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
    X

    பொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது

    • டெல்லி சுதந்திர தின பூங்காவிற்குபொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
    • ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் இந்திய அஞ்சல்துறை சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியில் அமைய உள்ள 75ம் ஆண்டு சுதந்திர தினப்பூங்காவிற்கு பொன்னமராவதி வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

    புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்வில் பொ ன்னமராவதி வட்டாரத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது.

    ஊர்வ லத்தை பொன்ன மராவதி தாசில்தார் எம்.வசந்தா தொடங்கி வைத்தார். பொன்னமராவதி சேங்கை ஊரணியில் தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக வந்து அமரகண்டான் வடகரையில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.

    தொடர்ந்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்றனர். வருவாய் ஆய்வாளர் எஸ்.சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் எம்.சண்முகம், ரோட்டரி சங்க மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பி னர் ஆர்யு.ராமன், முத்தமி ழ்ப்பாசறை அறங்காவலர் நெ.ராமச்ச ந்திரன் ஆகியோர் பங்கேற்ற னர்.

    முன்னதாக பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டி.நாராயணசாமி வரவே ற்றார். தலைவர் மா.சக்திவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×