search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
    X

    புதுக்கோட்டை ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காற்று மாசுபாடு தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி கொண்டாடபுதுக்கோட்டை ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

    புதுக்கோட்டை,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று எவ்வாறு மாசுபடுகிறத. அதனால் விளையும் தீமைகள் யாவை என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், புதுக்கோட்டை திலகர் திடல் ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மல்லிகாகணேசன் தலைமை வகித்தார்.

    மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தீபாவளி பலகாரம் அடங்கிய பைகளையும், மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் என்ற பிரசுரங்களையும் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருமான ஏவிசிசி கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மாசில்லா தீபாவளியை மனதார கொண்டாடுவோம் என்று

    பெற்றோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையும் ஆர்வத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பார்வையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

    Next Story
    ×