மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில் குப்பைகளை எரித்ததால் பரபரப்பு

மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில் குப்பைகளை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில்  குப்பைகளை எரித்ததால் பரபரப்பு
Published on

புதுக்கோட்டை:

அந்தாங்கி அருகே மணமேல்குடி அரசுப்பள்ளி பழைய கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இதே பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது, இக்கட்டிடம் விரிசலடைந்து கானப்படுவதால் கட்டிடத்தை அகற்றுவதற்காக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பழை கட்டிடத்தில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அகற்றும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வட்டாரக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆட்களுடன் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் சென்றவர்கள் குப்பைகளை கூட்டி கட்டிடத்திற்குள்ளேயே தீ வைத்துள்ளனர். இதில் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி வளாகத்திலிருந்து புகை வருகிறதே என்ற அச்சத்தில் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்க்கையில் குப்பைகள் எரிந்து கொண்டிருந்துள்ளது.அதனை தொடர்ந்து தீயை அணைத்த அவர்கள் குப்பைகளை கூட்டி வெளியே தள்ளியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் தீ விபத்து என்ற பொது மக்களின் அச்சத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com