பெண் தீக்குளிக்க முயற்சி

பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டதுபோலீஸ் நிலையத்தின் முன்பு நடந்தது
பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனங்குளத் தை சேர்ந்தவர் கனகசிவம் இவரது மகன் விக்கிரமாதித்தன் வயது 21 இவருக்கும் குலமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறியதால் ரத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கீரமங்கலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் விக்ரமாதித்தனை தேடி சென்ற போலீசார் அவரது அம்மா விஜயாவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்து விட் டதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சனையின் காரணமாக பரிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் இதுவரை திரு ப்பி கொடுக்கப்படவில்லை.

இது குறித்து விஜயா கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்று கேட்டதாகவும் அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த விஜயா நேற்று கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித் தார்.

இதனை கண்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி விஜயாவை காப்பாற்றினர். இதனால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரு ம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com