search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்காடு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
    X

    பெருங்காடு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

    • அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    அறந்தாங்கி,

    தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கடந்தவாரம் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சின்போது பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவன் மாரிமுத்துவின் உறவினர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சக்திராமசாமி, பொன்கணேசன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மரம் நடும் விழாவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போது எடுத்தப்படம்.

    Next Story
    ×