search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா
    X

    முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா

    • கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது
    • பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மண்டக படித்தார்களால், ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை, பூத்தட்டு, முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    Next Story
    ×