search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்குழிகாடு கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடைபெற்றது
    X

    கருங்குழிகாடு கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடைபெற்றது

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 34 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 40 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×