search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
    X

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவிலில் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக போட்டியை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தம் எட்டு குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். முதலில் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்டு களித்து வருகின்றனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    பாதுகாப்பு பணியில் இலுப்பூர் டி.எஸ்.பி. காயத்ரி தலைமையில் 132 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×