search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்கள்
    X

    சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்கள்

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குன்றா ண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஊராட்சி ஒன்றி யம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுக்கோட்டை நகராட்சி தர்மராஜ் பிள்ளை து வக்கப்ப ள்ளி ஆகிய 3 சத்து ணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றி தழ்களை, மாவட்ட க லெக்டர் மெர்சி ரம்யா வழ ங்கினார். பின்னர் மா வட்ட கலெக்டர் தெரி வித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தர்மராஜ் பிள்ளை நகராட்சி து வக்கப்ப ள்ளி ஆகிய 3 பள்ளி களின் சத்துணவு மை யங்களுக்கு, தமிழக அர சால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை தணிக்கை அலுவலரால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட்டது.

    மேலும் இப்பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள உணவு கூடங்களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்பமானி, ஜன்னல்களில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவு பாதுகாப்பு அங்கீகா ரம், தொற்றில்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்டவைகளை கடைப்பி டிக்கப் பட்டுள்ள தை கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் மேற்கண்ட 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று அதிகளவில் தரச்சான்று பெற்ற பள்ளி சத்துணவு மையங்களாக இம்மா வட்டத்தை மாற்றிட தொடர்புடைய அலுவ லர்கள் நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், சென்னை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன முதன்மை த ணிக்கை அலுவலர் கார்த்தி கேயன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெயராமன், மாவட்ட சத்துணவு பிரிவு உதவியாளர் சிவராஜன், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிசெல்வி போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்

    பேபிராணி, நகராட்சி ஆணையர் (பொ) முகமது இப்ராஹிம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவண பவா நந்தம் (அரிமளம்), சண்முகாதேவி (குன்றாண்டார்கோவில்), உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவிப் பொறியாளர் கலியமுத்து, சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×