என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் கராத்தே, சிலம்பம் தொடக்க விழா
- அரசு பள்ளியில் கராத்தே, சிலம்பம் தொடக்க விழா நடந்தது
- மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாண வ, மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பக்கலை கற்றுகொடுப்ப தற்கான தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு, பேரூராட்சித்தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ஹாஜி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சரோஜாதேவி, தி.மு.க. ஒன் றிய பிரதிநிதி இப்ராகிம், பேரூராட்சி கவுன்சிலர் லெட்சுமணன், துப் புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உட்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






