என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
- முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
- பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளை சுமந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்."
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்