கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர் தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கறம்பக்குடி,

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்தவர்களில் 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சாத்தான் தெரு ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் எரி சாராய ஊரல் இருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் அந்த ஊறல் பேரல்களை கைப்படுத்தி அதில் உள்ள சுமார் 200 லிட்டர் எரி சாராய ஊறலை அழித்தனர். விசாரணையில் இந்த எரி சாராய ஊரலை போட்டிருந்த கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com