டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்

கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்
Published on

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்து பேசினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கலைமணி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவக்கோட்டை ஒன்றியத் வட்டார தலைவர் ரகமதுல்லா டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.மாணவர்களுக்கு துளிர் மாத இதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சிவதீபன்,திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com