search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தில் நரிக்குறவர் சமூக பொதுமக்களை மாவட்ட கலெக்டர்கவிதா ராமு நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரெங்கம்மாள் சத்திரத்தில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து தரமானதாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வெள்ளனூர்ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 வீடுகள் கொண்ட 22 கட்டிடங்கள் ரூ.54.15 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பணிகளை நல்லமுறையில் முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதேபோல் வடசேரிப்பட்டி வலையங்குளம் வரத்து வாய்க்கால் ரூ.7 லட்சம் மதிப்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வெள்ளனூர்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் வடசேரிப்பட்டி கிராம அங்காடியை பார்வையிட்டு ஆய்வு செய்து கலெக்டர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தார். கருப்பையா, வீரப்பன் பயனாளிகளுக்காக வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் வடசேரிப்பட்டி அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும், தாவூத்மில் ஜலஜீவன்மிசன் திட்டத்தின்கீழ் 95 பயனாளிகளுக்கு குடிநீர்வழங்கும் திட்ட ப்பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சகிலாபானு, குளத்தூ ர்வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×