search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    கறம்பக்குடியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • கறம்பக்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • திமுக நகர செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க செயல்பாடு அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான உ முருகேசன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலை குழுவினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துதல் மேலும் மழைநீர் சேகரிப்பு சுற்றுப்புற தூய்மை மற்றும் கழிப்பறை பயன்பாடுகள் குறித்தும் கலை குழுவினர் சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×