search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்
    X

    சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்

    • சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
    • கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05 செலுத்தி பயிர் காப்பீடு செய்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந் தேதி ஆகும். தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நலன் கருதி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும். இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, இதுவரையிலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரினை உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×