search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகப்பட்டினத்தில் தொல்லியல் குழு நடத்திய ஆய்வு அறிக்கை வெளியீடு
    X

    தொல்லியல் குழு நடத்திய ஆய்வு குறித்து அறிக்கை ஷா நவாஸ் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.

    நாகப்பட்டினத்தில் தொல்லியல் குழு நடத்திய ஆய்வு அறிக்கை வெளியீடு

    • நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும்.
    • 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நாகப்பட்டினம் வருகை தந்து, சூடாமணி விகாரம் இருந்த நாகை நீதிமன்ற வளாகம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் அந்த ஆய்வு முடிவுகளை அறிக்கையாக அளித்துள்ளனர். அறிக்கையின் முதல் பிரதியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கினார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து, நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    Next Story
    ×