என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பொதுமக்கள் சாலை மறியல்

    • 3 பொக்லைன் எந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளினார்கள்.
    • 50 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுக்கு மாற்றிடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பூ கொள்ளை ராணி வாய்க்கால் தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி 3 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்து தள்ளினார்கள்.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை இடியுங்கள் என ஏற்கனவே கூறியும் அதிகாரிகள் கேட்காமல் வீடுகளை இடித்ததாக கூறி திடீரென ஆற்றுப்பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    50 ஆண்டுக ளாக குடியிருக்கும் தங்களை மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.

    பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×