search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ரோட்டின் மேல் புதிய ரோடு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    அரூர் அருகே பழைய ரோட்டின் மீது புதிய ரோடு அமைக்கும் பணி நடப்பதை படத்தில் காணலாம். 

    பழைய ரோட்டின் மேல் புதிய ரோடு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    • அரூர் அருகே பழைய ரோட்டின் மீது புதிய ரோடு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    தருமபுரி-திருவண்ணா மலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தருமபுரி-திருவண்ணா மலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ஏற்கெனவே தருமபுாி,கோபிநாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு. இச்சாலையில் தருமபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் முடி ஒரு முடிவு பெறும் நிலையில் உள்ளது.

    நான்கு வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது தார் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலையை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அரூர் அருகே உள்ள சேவா கிராம பகுதியில் பழைய சாலையை அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டிருந்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பழைய தார் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்து வந்த அரூர் வட்டாட்சியர் பெருமாள் வி.சி.க., கட்சினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாச்சியர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பழைய ரோட்டின் மேல புதிய ரோடு போடும் பணி நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×