மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சாலை, மின்சார வசதி என 276 மனுக்கள் பெறப்பட்டன- கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மூதாட்டி ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூதாட்டி ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகவேணி என்பவர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நலையில் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்து வருவதாகவும், மாதாந்திர உதவி தொகை பெற்று வந்த தனக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையும், கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் காசோலையாக வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com