search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது தேர்வு அறை கண்காணிப்பாளர் பணி குலுக்கல் முறையில் தேர்வு
    X

    அரூரில் நடைபெற்ற தேர்வு மைய கண்காணிப்பாளர் பணியிடத்தை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

    பொது தேர்வு அறை கண்காணிப்பாளர் பணி குலுக்கல் முறையில் தேர்வு

    • அரசு பள்ளி கள், தனியார் பள்ளிகள் உள்பட24 மையங்களில் நடை பெற உள்ளது.
    • அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 526 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

    அரூர்,

    தமிழகத்தில் வரும் மார்ச் 13-ம் தேதி முதல் 12-ம் வகுப்புக்கும் 14-ம் தேதி முதல் 11 வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

    அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரூர் ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி அரசு பள்ளி கள், தனியார் பள்ளிகள் உள்பட24 மையங்களில் நடை பெற உள்ளது.

    இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 526 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

    அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பணியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபாலன் முன்னிலை யில் கண்காணிப்பாளர்கள் ராக வேந்தர், செந்தமிழ்செல்வன், பன்னீர் ஆகியோர் பணி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் 22,757 பேர் 11ம் வகுப்பு தேர்வும் 19,680 பேர் 12ம் வகுப்பு தேர்வும் எழுதவுள்ளனர்.

    Next Story
    ×